Friday, August 8, 2008

இஸ்லாம் - புதிய தொடர் ஆரம்பம்


அறிமுகம்

இந்த உலகத்திற்கொரு படைப்பாளன் உண்டு. ஜீவன் அளித்து காற்றும் நீரும் வசப்படுத்தித் தந்து பூமியை வாழத் தகுந்த இடமாக்கிய இறைவன். நாம் இங்கு எவ்வாறு வாழ வேண்டும் இந்த வாழக்கையின் உண்மையான இலட்சியம் என்ன என்பதையும் தீர்க்கதரிசிகள் மூலம் நமக்குக் கற்றுத் தந்தான். நாம் இவ்வுலகில் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதைப் பற்றி நிச்சயமாக நமது மரணத்திற்குப் பின் நமது இறைவனால் விசாரிக்கப்படுவோம். அங்கு புண்ணியம் செய்தவர்களுக்கு நன்மையும் பாவம் செய்தவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும். எனவே படைத்த இறைவன் மனிதனுக்கு வழங்கிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வாழ்வதே மனிதனின் வாழ்க்கை இலட்சியம் ஆகும்.

நமது அகில உலகங்களின் இறைவனால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அடங்கிய வேதமே திருக்குர்ஆன். முஹம்மது நபியின் மூலம் அதனை இறைவன் மக்களுக்கு எத்திவைத்தான். இதனை அறிந்தவர்களும் அறியாதவர்களும் நமக்கிடையே உள்ளனர். இதனை அறியாதிருக்கும் மக்களை இவ்வாழ்காட்டுதல்களின் பால் அழைத்தல் அதனை அறிந்தவர்களின் மீது கடமையாகும். இந்தச் செய்தியை தமிழ் மக்களுக்கு எத்திவைக்கும் நோக்குடன் இத்தொடர் வெளியிடப் படுகிறது.

திரு எம்.எம் அக்பர் அவர்களின் இஸ்லாம் பற்றிய புத்தகத்திலிருந்து இங்கே செய்திகள் பதியப்படும். இன்ஷா அல்லாஹ்.

இறைவா! உண்மையான மார்க்கத்தை மக்களிடம் எத்தி வைப்பதற்கான எளிய முயற்சி இது. உன்னால் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதற்கான முயற்சி. இதனை நற்கூலிக்கு உரித்தானதாக ஏற்றுக் கொள்வாயாக.

0 comments: